Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டால் பல நோய்களையும் தடுக்க முடியும்

ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டால் பல நோய்களையும் தடுக்க முடியும்

1 minutes read

வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் அதன் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  

வெந்தயக் கீரையை, அப்படியே சமைத்தும் சாப்பிடலாம். அதேபோல, வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

வெந்தயத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் பல நோய்களையும் தடுக்க முடியும், வெந்தயத்தை சமைத்தும், விதையாகவும் சாப்பிடலாம்.

நீரிழிவு நோயாளிகள் வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

வெந்தயம் உங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் நிறைய கால்சியம் உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்துகிறது மற்றும் தேவையற்ற மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

உடல் பருமன் தான் பல நோய்களுக்கு அடிப்படை. உடல் எடை அதிகரிப்பை தடுக்க நினைப்பவர்களுக்கு வெந்தயம் அருமருந்து.

வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கணிசமாகக் குறைக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More