Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முல்லைத்தீவிலிருந்து பாரிய தொகை ஆயுதங்களை கைப்பற்றல்!

முல்லைத்தீவிலிருந்து பாரிய தொகை ஆயுதங்களை கைப்பற்றல்!

1 minutes read

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியிலிருந்து பாரிய தொகை ஆயுதங்களை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை கொண்டே வனப்பகுதி ஒன்றிலிருந்து இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது 2 கைக்குண்டுகள், 2 ஆர்பிஜி தோட்டாக்கள், 60 மீற்றர்களை கொண்ட 5 மோட்டார்குண்டுகள், 81 மில்லிமீற்றர் ரக 2 மோட்டார் குண்டுகள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.

இவை போர்க்காலத்தின் போது விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை விசேட அதிரடிப்படையினர் முல்லைத்தீவு பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More