டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடி வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள நீர்ஜா மோடி பள்ளியில் நபீசா அட்டாரி என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. “நாம் வெற்றி பெற்று விட்டோம்” என ஆசிரியை தனது வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார்.
இந்த தகவலை அறிந்த பள்ளி நிர்வாகம், ஆசிரியை நபீசா அட்டாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய காஷ்மீர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் காஷ்மீர் மெடிக்கல் சயின்ஸ் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.