Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 45 வயதானவரை திருமணம் செய்து எதிர்ப்பை சமாளிக்கும் இளம்பெண்

45 வயதானவரை திருமணம் செய்து எதிர்ப்பை சமாளிக்கும் இளம்பெண்

1 minutes read


திருமண புகைப்படத்தை பார்த்தவர்கள் மேகனாவுக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மேலும் வயதானவரை திருமணம் செய்ததாக மேகனாவுக்கு எதிராகவும் கருத்து கூறி வருகிறார்கள்.

பொதுவாக 90-ஸ் கிட்ஸ்களுக்கு பெண் கிடைப்பது இல்லை என்று, சமூக வலைத்தளங்களில் கிண்டல் பதிவுகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இத்தகைய நிலையில் 45 வயதான ஒருவரை, 25 வயது இளம்பெண் திருமணம் செய்த சம்பவம் கர்நாடகத்தில் அரங்கேறி உள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகனா (வயது 25). இவருக்கும் ஒரு வாலிபருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற மேகனாவின் கணவர் மாயமாகி விட்டார். அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் மேகனா தனியாக வாழ்ந்து வந்தார். மேலும் தனிமையாக இருப்பதை உணர்ந்த மேகனா 2-வது திருமணம் செய்யவும் முடிவு செய்தார். இந்த நிலையில் மேகனாவுக்கும், சிக்கதனேகுப்பே கிராமத்தில் வசிக்கும் சங்கரண்ணா (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் மேகனா, சங்கரண்ணாவை திருமணம் செய்ய விரும்பினார். இதற்கு சங்கரண்ணாவும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது. இதில் இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் சங்கரண்ணா-மேகனா ஆகியோரின் திருமண புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் மேகனாவுக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மேலும் வயதானவரை திருமணம் செய்ததாக மேகனாவுக்கு எதிராகவும் கருத்து கூறி வருகிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More