Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கடன் மறுசீரமைப்பு பேச்சுகள் வெற்றி! – ரணில் தெரிவிப்பு

கடன் மறுசீரமைப்பு பேச்சுகள் வெற்றி! – ரணில் தெரிவிப்பு

1 minutes read

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுகள் வெற்றியளித்திருக்கின்றன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் அவர்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்கும் புதிய அரசியல் முறைமையில் ஒற்றுமையுடன் கைகோர்க்குமாறு அனைத்து மக்கள் பிரதிநிதிகளிடமும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

மிகுந்த இக்கட்டான பொருளாதார பின்னணியின் மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இவ்வருடம் மருந்துகளுக்காக சுமார் 30 – 40 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்றும் கூறினார்.

அரசின் முறையான விவசாய கொள்கைக் காரணமாக இம்முறை மேலதிக நெல் அறுவடை கிடைத்திருக்கின்றது என்றும், குறைந்த வருமானம் பெறும் 20 இலட்சம் குடும்பங்களுக்குத் தலா மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசி வீதம் 2 மாதங்களுக்கு வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுதந்திர தினத்துக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்வதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அது எதிர்காலத்துக்கான முதலீடு என்று தெரிவித்தார்.

நூற்றாண்டு சுதந்திர விழாவை அடைவதற்குள் எதிர்வரும் 25 வருடங்களில் நாட்டுக்கு அவசியமான மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதற்கு அவசியமான பல புதிய நிறுவனங்களையும் சட்டங்களையும் அறிமுகம் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More