முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு, 10 ஆவது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார்.
நபர் ஒருவர் புதரில் கிடப்பதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் மேற்படி நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.