செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு: இருவருக்கு அழைப்பாணை

மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு: இருவருக்கு அழைப்பாணை

1 minutes read

மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் சட்டவைத்திய அதிகாரிக்கும் பேராசிரியர் ராஜ் சோமதேவவிற்கும் அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இன்றைய வழக்கு விசாரணைக்கு இவர்கள் இருவரும் சமூகமளிக்காமையால், அவர்களுக்கு அழைப்பாணையை பிறப்பிக்க மன்னார் நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மன்னார் சதொச மனிதப் புதைகுழி வழக்கு, மன்னார் நீதவான் A.S ஹிபதுல்லா முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக முடியும் என கடந்த தவணையின் போது அவர்கள் அறிவித்த போதும், அவர்கள் இன்று ஆஜராகவில்லை.

இந்நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி வழக்கின் முன்னேற்ற அறிக்கையை வவுனியா மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், எதிர்வரும் 26 ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More