செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் அகதிகள் தங்குமிட முகவரிகளை கசியவிட்ட ஊழியர் மீது வழக்கு

அகதிகள் தங்குமிட முகவரிகளை கசியவிட்ட ஊழியர் மீது வழக்கு

1 minutes read

நார்ஃபோக் (Norfolk) நகரின் தெட்போர்ட் (Thetford) பகுதியில் அகதிகள் தங்கும் வீடுகளின் முகவரிகளைப் பகிர்ந்த குற்றத்துக்காக, 62 வயதான ஜேம்ஸ் ஜாப்ஸன் (James Jobson) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகதிகளுக்குத் தங்குமிடம் வழங்கும் செர்கோ (Serco) நிறுவனத்தில் பணியாற்றிய இவர், பொது அலுவலகத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஓகஸ்ட் 3 முதல் 14 வரை இவர் பொதுமக்களின் நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் செயல்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜாப்ஸன் முகவரிகளைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து, தெட்போர்டில் உள்ள செயின்ட் ஜான்ஸ் வே, பிராக்கன் வீதி, குளோவர் வே, எல்ம் வீதி மற்றும் செஸ்டர் வே ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் மூன்று இரவுகளாக வன்முறை கும்பல்களால் குறிவைக்கப்பட்டன.

நார்விச் அருகே உள்ள கோஸ்டெஸி (Costessey) பகுதியைச் சேர்ந்த இவர், திங்களன்று இப்ஸ்விச் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள ஜாப்ஸன், செப்டம்பர் 14 அன்று நார்விச் கிரவுன் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக உள்ளார்.

செர்கோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த விவகாரத்தில் பொலிஸாருடன் தாங்கள் முழுமையாக ஒத்துழைப்பதாகவும், சட்ட நடவடிக்கைகள் தொடர்வதால் மேலதிக கருத்துகளைத் தெரிவிக்க முடியாது என்றும் கூறினார்.

நார்ஃபோக் பொலிஸார் இந்தத் தகவல்கள் வெளியானதற்கும், நகரில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.