வெஜ் தெகிரி அல்லது காய்கறிகள் சாதம் வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற ரெசிபியாகும். காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து சாப்பிட வைக்கலாம்.
தேவையான பொருட்கள்
கேரட் – 2
உருளைக்கிழங்கு – 2
காலிபிளவர் – பாதி பூ
பட்டாணி – 1 கப்
பீன்ஸ் – 100 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
தயிர் – 1/2 கப்
சீரகம் – 1 தேக்கரண்டி
கருவாப்பட்டை குச்சி – 1
கருப்பு ஏலக்காய் – 1
மிளகு – 5
இலவங்கப்பட்ட இலை – 2
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
மசாலா தூள் – 1 தேக்கரண்டி கரம்
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி – 2 தேக்கரண்டி
நெய் – 1/2 கப்
செய்முறை
வெங்காயம், தக்காளி, பீன்ஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி உருகியதும் பட்டை, பிரியாணி இலை, கருப்பு மிளகு, ஏலக்காய் எல்லாம் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
அடுத்து அதில் சீரகம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
அடுத்து தக்காளி, பச்சை மிளகாயை போட்டு வதக்கி கொள்ளுங்கள்.
அடுத்து தயிர் சேர்த்த பிறகு எல்லா காய்கறிகளையும் போடுங்கள். காய்கறிகள் நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் என்று எல்லா மசாலாக்களையும் போட்டு கிளறிக் கொள்ளுங்கள்.
பாஸ்மதி அரிசியை கழுவி சுத்தம் செய்து அதையும் காய்கறிகளுடன் சேர்த்து கிளறுங்கள். ரெம்ப கிளற வேண்டாம். ஏனென்றால் அரிசி உடைய வாய்ப்புள்ளது. இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கொள்ளுங்கள். மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் சமைத்து இறக்கவும்.
பிறகு பாத்திரத்தில் இருந்து சுடச்சுட காய்கறி சாதத்தை எடுத்து தயிர் அல்லது ரைதா வச்சு பரிமாறுங்கள்.
உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.