Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வைரலாகி வரும் விஜய் சேதுபதியின் மேடை பேச்சு

வைரலாகி வரும் விஜய் சேதுபதியின் மேடை பேச்சு

1 minutes read

மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும் தனக்கு பிடித்தால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் விஜய் சேதுபதி நடித்து வருவதால் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றார்களோ அதே போல அவரது மேடை பேச்சுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

பார்ப்பவர்களுக்கு உத்வேகம் தரக்கூடிய அவரின் பேச்சு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அதே போல தற்போது கல்லூரி ஒன்றில் விஜய் சேதுபதி பேசிய பேச்சு செம வைரலாகி வருகின்றது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தன் வாழ்க்கை அனுபவத்தை வைத்து அறிவுரை கூறிய விஜய் சேதுபதி ஒரு திருக்குறள் ஒன்றை கூறினார்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

என்ற திருக்குறளை அவர் கூறினார்.இக்குறளில் தலை என முடிவதை கேட்ட மாணவர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி, இப்போ ஏன் சத்தம் போடுறீங்க, நாம என்ன பேசிகிட்டு இருக்கோம், நீங்க என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க என சற்று காட்டமாக பேசினார். தற்போது இந்த வீடியோ சமூகத்தளங்களில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More