சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் ஜூலை 14ஆம் திகதி வெளியாகும் என செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் தான் சிவகார்த்திகேயன் தனது பகுதியில் டப்பிங் பணியை முடித்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்றுமுன் ‘மாவீரன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் அடுத்த படம் ‘மாவீரன்’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.