Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் பெண்களை பற்றி யாரும் அறியாத 10 ரகசியங்கள்!

பெண்களை பற்றி யாரும் அறியாத 10 ரகசியங்கள்!

3 minutes read

நீங்கள் பெண்களாக இருந்தால் இந்த 10 ரகசிய விஷயங்களில், உங்களிடம் இருக்கக்கூடிய அந்த குணாதிசயங்கள் எது என்பதை நீங்களே சோதித்துப் பாருங்கள். நீங்கள் ஆண்களாக இருந்தால் இந்த 10 விஷயங்களில் நீங்கள் பெண்களிடம் எதை அதிகமாக நோட் பண்ணி இருக்கீங்க. இந்த குணங்கள் எல்லாம், பெண்களிடம் உள்ளது என்று உங்களுக்கு முன்னாடியே தெரிந்திருந்தால் நீங்கள் பெண்களை புரிந்து வைத்திருக்கும் ஆண்கள் என்றுதான் அர்த்தம். சரி சுவாரஸ்யமான இந்த பதிவை படிப்பதற்கு நீங்கள் தயாரா. பதிவுக்கு செல்வோம் வாருங்கள்.

முதல் விஷயம் | ஆண்களைவிட பெண்களால் வண்ணங்களை சுலபமாக வித்தியாசப்படுத்தி பார்க்க முடியும். அதாவது, டார்க் கலர் லைட் கலர் என்று இரண்டு வண்ணங்களை ஒன்றாக வைத்து ஆண்களை பார்க்க சொன்னால் அதில் இரண்டிலும் இருக்கக்கூடிய சின்ன வித்தியாசத்தை அவர்களால் கண்டு பிடிக்கவே முடியாது. ஆனால் அதை பெண்கள் டக்குனு கண்டுபிடித்து விடுவாங்கலாம். ஆண்களைவிட பெண்களால் 20% அதிகமான வண்ணங்களைப் பார்க்க முடியும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.

இரண்டாவது விஷயம் | வித்தியாசமான ஏதாவது சின்ன வாசனையாக இருந்தாலும் ஆண்களைவிட பெண்களால் அதை சீக்கிரமே உணர முடியும். வண்ணங்களை வேறுபடுத்திப் பார்ப்பதிலும், வாசத்தில் வித்தியாசத்தை கண்டு பிடிப்பதிலும் இயற்கையாகவே ஆண்களை விட பெண்களுக்கு, சக்தி அதிகம்.

மூன்றாவது விஷயம் | பெண்கள் அதிகமாக விரும்பிப் போட்டுக் கொள்ளக்கூடிய அழகுசாதனம் லிப்ஸ்டிக். சராசரியாக, தினம் தோறும் லிப்ஸ்டிக் போட கூடிய பழக்கம் உள்ள பெண், ஒரு வருடத்தில் 260 நாட்கள் லிப்ஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இவர்கள் வருடத்தில் தன்னுடைய உதட்டில் போடும் உதட்டுச் சாயத்தைப் (.45kg) அளவு சாப்பிட்டு விடுகிறார்கள். நீங்கள் லிப்ஸ்டிக் போடும் பெண்ணா.

நான்காவது விஷயம் | திருமணத்துக்கு முன்பு ஹீரோ போல அழகாக இருக்கும் ஆண்கள், திருமணத்திற்கு பின்பு எடை கூடுவதற்கு இன்ட்ரஸ்டிங்கான இரண்டு விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. உலகில் உள்ள அத்தனை ஆண்களுக்கும் இது பொருந்தும். பொதுவாகவே பெண்கள் கணவரிடம் எதிர்பார்ப்பது ஒரு பாதுகாப்பு. எல்லா பெண்களுமே எப்போதும் கணவர் நமக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

நமக்கு பாதுகாப்பாக இருக்கும் கணவர் ஒல்லியாக இருந்தால் அவர்களுக்கு இயல்பாகவே பிடிக்காதாம். அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை கொடுத்து அந்த ஆண்மகனை எப்படியாவது வலிமை ஆக்கிவிட வேண்டும் என்று நினைப்பார்கள். இது ஒரு விஷயம்.

இரண்டாவது, திருமணத்திற்கு முன்பு அழகாக இருக்கும் ஆண்களை எத்தனை பெண்கள் வேண்டுமென்றாலும் பார்க்கலாம். திருமணத்திற்குப் பின்பு அந்த ஆணினை வேறு பெண்கள் யாரும் பார்க்கக் கூடாது என்ற எண்ணம் அந்த ஆணை திருமணம் செய்த பெண்ணுக்கு இருக்கும். உடல் கட்டுடன் அழகா இருக்கும் ஆண்களாக இருந்தாலும், அவர்களுக்கு நிறைய உணவை கொடுத்து அவர்களுடைய உடல் அழகை குறைத்து வைத்தால் அந்த ஆணை வேறு எந்தப் பெண்ணும் பார்க்க மாட்டார்கள் அல்லவா? இப்படி நிறைய பெண்கள் சிந்திப்பதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது விஷயம் | பெண்கள் உடை அணிந்து கொள்வதில் எப்போதுமே தனி கவனம் செலுத்துவார்கள். அவர்களுக்கு சவுகரியமாக இல்லாத பட்சத்திலும், அழகிற்காக அடுத்தவர்கள் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்பதற்காக, சில உடைகளை அவர்கள் விரும்பி அணிந்து கொள்வார்கள். அதாவது ஆண்களுக்கு எது சவுகரியமாக இருக்கிறதோ அதை போட்டுக் கொள்ளும் பழக்கம் உண்டு. ஆனால் பெண்கள் தனக்கு சவுகரியம் இல்லாவிட்டாலும், இறுக்கமான ஆடையாக இருந்தால் கூட அதை அழகுக்காக அணிந்து கொள்வார்களாம்.

ஆறாவது விஷயம் | பொதுவாகவே பெண்கள் என்றால் ஹை ஹீல்ஸ் என்று சொல்லப்படும், உயரமான செருப்பு அணிவதை அதிகமாக விரும்புவார்கள். ஆனால் இந்த ஹை ஹீல்ஸ் என்பது பெண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விஷயமே அல்ல. ஆண்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, போருக்கு செல்லும் போது போர்க்களத்தில் உயரமாக நின்றுகொண்டு அம்பு எய்த வேண்டும் என்பதற்காக செருப்பை உயரமாக அணிந்து கொள்ளும் வழக்கம் இருந்தது. ஆனால் அந்த வழக்கம் காலப்போக்கில் மாரி ஹைஹீல்ஸ் பெண்களுக்கு என்று ஆகிவிட்டது.

ஏழாவது விஷயம் | ஆண்களால் பெண்களை முழுமையாக புரிந்துகொள்ள முடியுமா என்று கேட்டால் அது கேள்விக்குறிதான். ஆனால் பெண்கள் ஆண்களின் அசைவிலிருந்து, முக பாவனையில் இருந்து அவர்கள் மனதிற்குள் நினைக்கும் எண்ணம் வரை எல்லாவற்றையும் சரியாக கணிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

எட்டாவது விஷயம் | ஆண்களை, பெண்கள் பின் பக்கத்திலிருந்து 10 மணிநேரம் பார்த்தால் கூட ஆண்களால் அதை கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால் பெண்கள், ஆண்கள் தங்களை பார்க்கிறார்களா இல்லையா, ஆண்களின் கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது எதில் விழுகின்றது என்பதை பத்தடி தூரத்தில் இருந்தாலும், திரும்பியே பார்க்காமல் சரியாக கணித்து விடுவார்களாம்.

ஒன்பதாவது விஷயம் | பொதுவாகவே ஆண்களின் ஆயுள் காலத்தை விட பெண்களின் ஆயுள் காலம் இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் அதிகமாக இருக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. இதற்கு என்ன காரணமாக இருக்கும். பொதுவாகவே பெண்கள் எந்த விஷயத்திலும் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள். ஆண்கள் அதிகப்படியான ரிஸ்க்கை தங்களுடைய வாழ்க்கையில் எடுப்பதால், அவர்களுடைய ஆயுட்காலம் குறைக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இறுதியாக பத்தாவது ஒரு விஷயம் | என்னதான் பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், பிரில்லியன்ட் என்று சொல்லிக்கொண்டாலும், பெண்களால் உணரக்கூடிய சில விஷயங்களை, ஆண்களால் எப்போதுமே எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் புரிந்துகொள்ள முடியாது. இயற்கையாகவே ஆண்டவன் சில குணாதிசயங்களை பெண்களுடைய வாழ்க்கைக்காக பிரத்தியேகமாகவே படைத்துள்ளார் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

நன்றி | தெய்வீகம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More