கடந்த 19 வருடங்களாக இலங்கை இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் முகமாகவும், முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், வழங்கப்பட்டு வரும் கொடகே தேசிய சாகித்திய விருது இலங்கை தமிழ் இலக்கியத்திற்கும் கடந்த 10 வருடங்களாக வழங்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த நாவல், சிறுகதை, கவிதை நூல்களில் சிறந்தவை தெரிவு செய்யப்பட்டு கொடகே தேசிய சாகித்திய விருது வழங்கப்படவுள்ளது.
சிங்கள-தமிழ் மொழிகளில் இன ஐக்கியத்தையும், இனங்களிடையே நல்லுறவையும் கெளரவிக்கும் முகமாக 2019 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஒன்றுக்கும் இன ஐக்கியத்திற்கான மொழிபெயர்ப்பு நூலுக்கான கொடகே தேசிய சாகித்திய விருது வழங்கப்படும். மூலநூல் இலங்கையில் வெளியிடப்பட்டு இருத்தல் வேண்டும்.
நாவல், சிறுகதை, கவிதை ஆகிய துறையில் தன் முதல் நூல் வெளியிட்ட சிறந்த படைப்பாளி ஒருவருக்குக் கொடகே தேசிய சாகித்திய விருதுக்கான பணப்பரிசிலும், சான்றிதழும் வழங்கப்படும்.
அத்தோடு தமிழ் கலை இலக்கியத்திற்குப் பணியாற்றிய படைப்பாளி ஒருவருக்கு கொடகே வாழ்நாள் சாதனை விருதும் வழங்கப்படவுள்ளது.
பரிசீலனைக்கு அனுப்பப்படும் சகல நூல்களும் முதல் பதிப்பாக இலங்கையில் பதிப்பிக்கப்பட்டு இலங்கையில் ISBN பெற்றுக் கொண்ட நூல்களாக இருத்தல் வேண்டும்.
பரிசீலனைக்கு நூலின் மூன்று பிரதிகள் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ந்திகதிக்கு முன்னதாக நேரடியாகவோ, தபால் மூலமாகவோ கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
S. Godage & Brothers (Pvt) Ltd. 661/665/675, P. de S. Kularatne Mawatha, Colombo 10, Sri Lanka.
இணைப்பாளர்கள்
அனுரசிறி ஹெட்டிகே, மேமன்கவி(0778681464)