Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் மூத்த ஈழப் படைப்பாளி தாமரைச்செல்வியின் ஆறு நாவல்கள் குறித்த நிகழ்வு!

மூத்த ஈழப் படைப்பாளி தாமரைச்செல்வியின் ஆறு நாவல்கள் குறித்த நிகழ்வு!

1 minutes read

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வியின் சுமைகள் முதல் உயிர்வாசம் வரையிலான ஆறு நாவல்கள் குறித்த விமர்சன அரங்கு ஒன்றை வணக்கம் இலண்டன் இணையத்தளம் ஏற்பாடு செய்துள்ளது.

ஈழத்தின் கிளிநொச்சியை சேர்ந்த புகழ்பூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வி, பச்சைவயல் கனவு, மற்றும் வன்னியாச்சி சிறுகதை தொகுப்பின் ஊடாக பரவலாக அறியப்பட்டவர். ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவராக கருதப்படும் இவர், 1973 முதல் சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதிவருகின்றார். இவருக்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.

சுமைகள், தாகம், வீதியெல்லாம் தோரணங்கள், பச்சை வயல் கனவு முதலிய நாவல்களையும் மழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை, வன்னியாச்சி முதலிய சிறுகதை தொகுப்புக்களையும் எழுதியுள்ள தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நாவலானது, அண்மையில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஈழத்தின் இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு விமர்சன உரைகளை ஆற்றவுள்ளதுடன் நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்களும் தமது வாழ்த்துகள் மற்றும் கருத்துக்களையும் பகிரலாம்.

வணக்கம் இலண்டன் வெளியிட்ட அழைப்பு

வணக்கம்,

வணக்கம் இலண்டனின்
ஏற்பாட்டில்
தலைமுறை தாண்டிய பயணம் – 9

சுமைகள் முதல் உயிர்வாசம் வரை
தாமரைச்செல்வியின்
ஆறு நாவல்களைப் பேசும் இலக்கியக் களம்

மெய்நிகர் அரங்கு
05/09/2021 ஞாயிற்றுக்கிழமை
08.00 மணி – கனடா
13.00 மணி – பிரித்தானியா
14.00 மணி – ஐரோப்பா
17.30 மணி – இலங்கை, இந்தியா  
22.00 மணி – அவுஸ்திரேலியா

இணைப்பு:
https://us02web.zoom.us/j/6948884760
நுழைவு எண்:
694 888 4760

கலந்து சிறப்பிக்க உங்களையும் அழைக்கின்றோம்

நன்றி
வணக்கம் இலண்டன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More