Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் நினைவுப் பேருரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் நினைவுப் பேருரை

2 minutes read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரும் தமிழ்ப் பேராசிரியருமான பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் நினைவாக வருடந்தோறும் நினைவுப் பேருரை இடம்பெற்று வருவது அப்பல்கலைக்கழகத்தின் முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகும்.

இந்த வருடத்திற்கான நினைவுப் பேருரை எதிர்வரும் 17-11-2022 அன்று வியாழக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் புகழ்பூத்த கணிதவியல் அறிஞருமான பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா அவர்களின் தலைமையில் நிகழ்ந்த மேற்படி நிகழ்வில், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆய்வாளரும் கவிஞரும் விமர்சகருமாகிய கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்கள் நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.

காலனிய கால இலங்கைத் தமிழ்ச் சமூகம் தொடர்பான முக்கியமான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டுள்ள அவர், “நாவில்லா உபதேசிகள்: காலனிய யாழ்ப்பாணத்தில் சிறுபுத்தகக் கலாசாரமும் சமயக் கருத்தாடலும்” எனும் பொருளில் தமது பேருரையை நிகழ்த்தினார். அரங்கு நிறைந்த பார்வையாளருடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கலைப்பீடாதிபதியின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நினைவுப் பேருரை அழகிய நூலாகவும் வழங்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More