பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செ.சுதர்சனின் காலிமுகம் 22 கவிதை நூல் வெளியீடு விழா நாளை (23.11.2022) புதன் பிற்பகல் 3.00 மணிக்குப் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையில் நிகழும் மேற்படி விழாவில் பேராசிரியர் துரை.மனோகரன் வெளியீட்டு உரையையும் தமிழ்த்துறையின் உதவி விரிவுரையாளர் திரு. வி. விமலாதித்தன் நயப்புரையையும் நிகழ்த்துகின்றனர்.