சேலம் மாவட்டம் வாழப்பாடி காட்டுவேப்பிலைப்பட்டி அருகே உள்ள சென்றம்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த பரமசிவம் என்பவரது மகள் பூங்கொடி 10 இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்ததார்.
இவர் கடந்த 14ம் தேதி அப்பகுதியில் உள்ள கோயில் ஆலமரத்தில் நிர்வாணமாக தூக்கில் தொங்கிகொண்டிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. சக்திவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று பூபதி, ஆனந்தன், பிரபாகரன் பாலகிருணன் உள்ளிட்ட 5 பேரை இந்த வழக்கு சம்பந்தமாக கைது செய்தனர்.
இதில் பூபதி என்பவர் பா.ம.கவை சேர்ந்த பிரமுகர் ஆவார். இவர்கள் அனைவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு தண்டனைகள் வழங்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.