உக்ரெயின் – ரஷ்யா எல்லையில் உள்ள கிரிமீயா பகுதியில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்கா ரஷ்யாவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி கூறியுள்ளதாவது:- உக்ரெயின் ரஷ்ய எல்லை கிரீமியா பகுதியில் தற்போது ரஷ்ய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இது உக்ரெயினில் மேலும் பதற்ற நிலையை அதிகரித்துள்ளது. எனவே தற்போது வேறு எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டாம் என ரஷ்யாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அதேநேரம் உக்ரெயின் முன்னாள் அதிபர் தற்போது ரஷ்யாவின் பாதிகாப்பிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.