ஸ்பெயினில், கொரோனா தொற்றால் 13,000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், அந்நாட்டில், சவப்பெட்டிகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனால், தினமும் நூற்றுக்கணக்கான சவப்பெட்டிகள், லாரிகளில் அடுக்கப்பட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்படுகின்றன.
அங்கு, கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்கள், குமுழி உறைகளில் வைத்து, சீல் வைக்கப்பட்ட பின்னர், சவப்பெட்டிகளில் வைத்து, கல்லறைக்கு அனுப்பப்படுகிறது.
மேலும், கொரோனா பாதிப்பு இல்லாமல், இறப்பவர்களின் உடல்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதே போன்று கையாளப்படுகிறது.