உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஆண்டுதோறும் மே 12-ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சம்பிரதாயபூர்வமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அது அங்கு சமூகமளிக்கும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் தாதியர்களின் பணி மகோன்னதமானது. இக் காலத்தில் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி, கொரோனாவல் உயிர் நீத்த தாதியர்களும் உண்டு. அவர்களுக்கு எமது அஞ்சலி. மருத்துவ அன்னையைப் போன்ற தாதியர்களின் பணிக்கு தலைசாய்த்து அவர்களுக்கு பெருமை மிகு வணக்கத்தை செலுத்துகிறது எம் இணையம்.
-வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன்