Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வயதானவர்கள் புதியவர்களுக்கு இடமளித்து ஓய்வு பெறுவது சிறந்தது! சந்திரிகா

வயதானவர்கள் புதியவர்களுக்கு இடமளித்து ஓய்வு பெறுவது சிறந்தது! சந்திரிகா

1 minutes read

உடல் நல குறைவுடன் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் தலைவர்கள், புதியவர்களுக்கு இடமளித்து, ஓய்வுபெற்று சென்றால்தான் நாட்டை கட்டியெழுப்ப முடியுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க  தெரிவித்துள்ளார்.

ஹொரவப்பொத்தனை பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் சந்திரிகா பண்டாரநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “நான் பலவந்தமாகவே மீண்டும் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டேன்.

மேலும், தங்களை அரசியல்வாதிகள் எனக்கூறிக்கொண்டு நாடாளுமன்றத்திற்குள்  நுழையும் பெரும்பாலானோர் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற பாதையை நோக்கி கொண்டுச்செல்ல மாட்டார்கள் என்பதை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நான் புரிந்துகொண்டேன்.

அத்துடன் அவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கிலேயே நாடாளுமன்றத்திற்குள் நுழைகின்றனர். இத்தகையானவர்களுடன் அரசியலில் ஈடுபட நான் விரும்பவில்லை.

இதேவேளை தற்போது உடல் நல குறைவுடன்அரசியல் செயற்பாட்டில் ஈடுபடும் தலைவர்கள், ஓய்வுப்பெற்று புதியவர்களுக்கு இடமளிப்பார்களாயின் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More