Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு இலங்கையர்கள் படுகொலை; சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலை

இலங்கையர்கள் படுகொலை; சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலை

1 minutes read

ஒட்டாவா, பெர்ஹெவனில் 06 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான இலங்கை இளைஞன் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது, சந்தேக நபர் மிகக் குறைவாகவே நீதிமன்றில் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நீதிமன்றத்தில் தனது பெயரையும் பிறந்த இடத்தையும் மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி சந்தேக நபர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தொடர்புடைய செய்தி : கனடாவில் 6 இலங்கையர்கள் வெட்டிக்கொலை; இலங்கை இளைஞன் கைது

இதேவேளை, சந்தேகநபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

எனினும், சந்தேக நபர் ஏன் கொலை செய்தார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More