Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொலை

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொலை

0 minutes read

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கவானாக் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பூட்டா சிங் கில் என்ற இவர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

இவர், அங்குள்ள பஞ்சாபி சமூகத்தினர் இடையே பெரும் செல்வாக்கு மிக்க நபராக இருந்தார்.

இந்த நிலையில், குடியிருப்பு பகுதியில் பூட்டா சிங் கில் தனது நண்பர்கள் 2 பேருடன் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர் அவர்கள் 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டார்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பூட்டா சிங் கில்லும், அவரது நண்பரும் சடலமாக மீட்கப்பட்டதுடன், மற்றொரு நபர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More