Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் எம் ஆசைகளை அடக்குவது எப்படி

எம் ஆசைகளை அடக்குவது எப்படி

1 minutes read

மனிதனாக பிறந்தவன் நிச்சயம் எண்ணன்களின்  பிறப்பிடமாகவே இருப்பான் இந்த எண்ணங்கள் உணர்வுகளின் வழித்தோன்றலாக இருக்கும் எனவே அத்தகைய எண்ணங்களை நாம் அவதானிப்போமேயானால் அவை காம ,குரோத, ஆசை,வெறுப்பு ,கோபம் என நீண்டு செல்கின்றது.

இப்போது இந்த எண்ணங்களை எவ்வாறு அடக்கியாழ்வது தொடர்பில் ஒரு கதையை பார்ப்போம் புத்தரின் சீடர் பற்றிய கதை தான் இது ஒரு அரசன் புத்தரின் சீடராக மாற விரும்பினார். அப்போது அவருக்கு உணவை பிச்சை எடுத்து உன்ன வேண்டிய தேவை ஏற்பட்டது அப்போது தான் அவர் எப்படி அதை பிச்சை எடுத்து உண்ணுவார் எனவே அரசனாக வாழ்ந்தவர் திடீர் என்று பிச்சை எடுக்க முடியாது புத்தர் அவரிடம் சொன்னார்  சீடரே நீங்கள் எனது பெண் சீடர் ஒருவர் ஊரினுள் வாசிக்கின்றார். அங்கெ சென்று அவரிடம் இன்று உணவு அருந்துங்கள் என்று. போவதட்கு 2 மயில் தொலைவு இருந்தது அப்போது அவர் போகும் வழியில் இவ்வாறு சிந்தித்து வருகிறார். நான் ஒரு துறவி  நினைத்ததை உன்ன முடியாது கிடைத்த உணவை தான் உன்ன வேண்டும் என்று பின் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றவுடன் அந்த பெண் அவரை அன்பாக வரவேற்று அவருக்கு விருப்பமான உணவை பரிமாருக்கிறாள் அதை கண்டு ஆச்சரிய பட்ட அவர் நான் சிந்த்திததை இந்த பெண் செய்துள்ளார் என்று வியந்தார்.

பின் உணவை அருந்தி விட்டு படுக்க நினைத்த போது அந்த பெண் அதற்கான ஆயத்தங்களை செய்து வைத்தார். அதன் பின்னர் படுத்திருந்து இனி எனக்கு வீடும் இல்லை கூரையும் இல்லை நிழலும் இல்லை என்று  உறங்க சென்ற போது அந்த பெண் ஏன்  இவ்வாறு எண்ணுகின்றீர்கள் புத்தரின் நிழலே உங்களுக்கு பெரிய நிழல் இந்த வானமே மிக பெரிய கூரை எனவே இதை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை என்கிறார் . இதை கேட்டு பதட்டம் அடைந்த அவர் நான் மனதில் நினைத்தது உங்களுக்கு எப்படி தெரிந்த்தது என்கிறார். நான் முதலில் என் எண்ணங்களை அவதானிக்க முயன்றேன் பின் என் மனம் அமைதியாகி விட்டது பின்னர் நான் பிறர் மனதின் எண்ணங்களை அவதானிக்க ஆரம்பித்தேன் என்கிறார் .

இதை கேட்ட அவர் பதட்டத்துடன் புத்தரிடம் வந்து நான் இனி அந்த வீட்டுக்கு செல்லப் போவதில்லை என்கிறார் அப்போது அவரும் என்னவிடயம் என விசாரித்தார் அந்த பெண் பிறர் மனதில் நினைப்பது அறிந்து கொள்கின்றார் என்கிறார் . இறுதியில் புத்தர் சொன்னார் நீ நிச்சயம் அங்கு செல்லவேண்டும் என்கிறார்.

அடுத்தநாள் அவர் அங்கு செல்கிறார் ஆனால் இம்முறை தன்  எண்ணத்தில் கவனம் செலுத்துகின்றார் திடீர் என்று அவரது மனம் அமைதியாக இருப்பதையே அவர் உணர்கின்றார். அதன் பின் அந்த வீட்டுக்கு அவர் செல்லவேண்டிய தேவையே இல்லை என புத்தர் சொல்லி விட்டார்.

எனவே அவர் மனதின் அனைத்து எண்ணங்களையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள பழகிவிட்டார் என்பதே பொருள்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More