வேத ஜோதிடத்தின் படி, ஒருவரின் பிறந்த கிழமையே அவர்களின் ஆளுமை, வாழ்க்கை நடை மற்றும் மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்களுக்கு லட்சுமி கடாட்சம் இருப்பதாக பொதுவாக கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை என்பது வீனஸ் (சுக்கிரன்) கிரகத்தின் ஆட்சி நாளாகும். அன்பு, அழகு, இன்பம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த கிரகத்தின் தாக்கத்தால், இந்த நாளில் பிறந்தவர்கள் இயல்பாகவே கவர்ச்சிகரமான ஆளுமையுடன் இருப்பார்கள்.
இவர்கள் கனிவான மனமும், மற்றவர்களை ஈர்க்கும் தன்மையும் கொண்டவர்கள். நல்லிணக்கத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடையும் இவர்கள், இயற்கையாகவே அமைதியும் படைப்பாற்றலும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். காதல் மற்றும் உணர்ச்சிகளில் ஆழமான ஈடுபாடு கொண்ட இவர்களுக்கு காந்த ஆளுமை இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் சமூகத் தொடர்புகளை விரும்புபவர்கள். நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை மிகவும் ரசிப்பார்கள். நல்ல நகைச்சுவை உணர்வுடன், பிறரை சிரிக்க வைக்கும் திறன் கொண்டவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளையும் பார்வைகளையும் புரிந்துகொள்ளும் திறன் இவர்களுக்கு இயல்பாகவே அமையும்.
தொழில் மற்றும் பணியாழ்வில், இவர்கள் லட்சியவாதிகளாகவும் கடின உழைப்பாளிகளாகவும் திகழ்வார்கள். படைப்பாற்றல் மற்றும் வளமான சிந்தனை கொண்ட இவர்கள், மற்றவர்களை ஊக்குவிக்கும் இயற்கையான தலைமைத் தன்மையையும் பெற்றிருப்பார்கள்.
எதிர்மறை பண்புகள்:
சில நேரங்களில் முடிவெடுக்க முடியாதவர்களாகவும், அதிக உணர்திறன் உடையவர்களாகவும் இருக்கலாம். சோம்பேறித்தனமோ அல்லது வேலைகளை தள்ளிப்போடும் பழக்கமோ சிலருக்கு காணப்படலாம்.
வெள்ளிக்கிழமை பிறந்தவர்களுக்கு ஏற்ற சிறந்த தொழில்கள்:
கலைஞர், ஆலோசகர், ஆசிரியர், சமூக சேவகர், மனிதவள மேலாளர், நிகழ்வு திட்டமிடுபவர், சந்தைப்படுத்தல் மேலாளர், தொழில்முனைவோர், உள்துறை வடிவமைப்பாளர், எழுத்தாளர், இசைக்கலைஞர், உளவியலாளர், மக்கள் தொடர்பு நிபுணர், ஃபேஷன் டிசைனர், சமையல்காரர் அல்லது பேக்கர், பேச்சு சிகிச்சையாளர், கிராஃபிக் டிசைனர், நடிகர் அல்லது நடிகை, தனிப்பட்ட பயிற்சியாளர், நிலத்தோற்றக் கட்டிடக் கலைஞர் போன்ற துறைகளில் இவர்கள் சிறப்பாக முன்னேற முடியும்.