இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஓர் ஆன்மீகக்குரு வண. பிதா தோமஸ் குருவானவர் அக்காலத்திலிருந்த யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு. கைமர் ஆண்டகையின் அனுமதியுடனும் ஆசியுடனும் மாதாவின் மந்திர மாலையை அனுதினமும் இரவும் பகலுமாக தொடர்ந்து செபித்துவந்தார். இவர் உலக மக்களின் நல் வாழ்வுக்காகவும் ஆன்மீக ஈடேற்றத்திற்காகவும் பாவமன்னிப்புக்காகவும் செபிக்க ஆண்களுக்கென ஒரு செபமாலைதாசர் மௌனசபையைத் தொடக்கினார்.
இப்பெயரைக் கொண்டு உலகெங்கும்குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளில். செபமாலை தாசர் மௌன சபை, செபமாலை கன்னியர் மௌன சபை என கத்தோலிக்க மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றது.
தமது ஆசாபாசங்களை அடக்கி செபம் தபம் ஒறுத்தல் மௌனம் போன்ற நற்காரியங்களை இச்சபை அங்கத்தவர்கள் செய்து வருகின்றனர். நான் பாடசாலைச் சிறுவனாக இருந்தபோது யாழ்ப்பாணம் அச்சுவேலி தோலகட்டியில் இயங்கி வந்த செபமாலை தாசர் சபைக்கு சென்று மறைந்த வண பிதா தோமஸ் குருவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன். மெலிந்த உடலும் தளராத நடையும் கூர்மையான பார்வையும் மெல்லிய தாடியும் கொண்டு காலையில் தோட்டத்தில் நடந்து கொண்டே மௌனமாக செபமாலை சொல்லித்திரியும் ஓர் உத்தம ஆன்மாவைக் கண்டேன்.
யாழ் தோழகட்டியில் ஆவர் ஆச்சிரமத்தில் நிறைந்து காணப்படும் முந்திரிகை நெல்லி மாதுளை முதலியவற்றைக் கொண்டு சுவையும் உயர்ந்த தரமும் வாய்ந்த மென்பானங்களை தயாரித்து உலக நாடுகளில் பிரபல்யம் பெற்று வருகின்றனர். “ தோலகட்டி நெல்லி ரசம்” கனடா ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பிரசித்தி பெற்றதாக காணப்படுகின்றது.
தோமஸ் குருவானவரின் இறுதிநாட்கள் நெருங்கிய நிலையில் இறந்த அவரது புனித உடல் தோழகட்டி ஆச்சிரமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பலாலி அச்சுவேலி ஒட்டகப்புலம் போன்ற பகுதிகள் 1990 ம் ஆண்டில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்த போது மக்கள் நடமாட்டத்திற்கப்பாற்பட்ட சூனிய பிரதேசமாக மாறியமையாலும், உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டமையாலும், அமரர் வண. பிதா தோமஸ் அடிகளின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு யாழ் ஆலய வீதியில் அமைந்துள்ள புதிய செபமாலை தாசர் சபை வளாகத்தில் இரண்டாம் முறை அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறை அடியாருக்கு புனிதர் பட்டம் வழங்கும் முயற்றிகளும் நடை பெற்று வருகின்றன.
அச்சுவேலியில் ஆரம்பித்த ஆண்களுக்கான செபமாலை தாசர் சபையானது , இன்று துரித கதியில் வளர்ச்சியடைந்து பெண்களுக்கென ஒரு தனிச்சபை ஒன்றினையும் கொண்டுள்ளது. இன்று ஆண்கள் பெண்கள் என பலர் இச் சபையில் இணைந்து திருச்சபைக்காக ஆர்வத்துடன் உழைத்து வருகின்றனர்.
மறைந்த அருட் சகோதரி நசரேத் தனது சபையை 1975 களில் மன்னாரில் ஆரம்பித்து வைத்தார். மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தின் அருகில் இயங்கி வந்த செபமாலை கன்னியர் சபையானது பின்னர் ஆயர் இல்லத்தின் இருப்பிடமான பட்டி தோட்டம் கிராமத்தில் பெரிதாக வியாபித்தது.அதில் 12 பேருக்கு குறையாத கன்னியர்கள் உலக மக்களின் ஈடேற்றத்திற்காக மௌனமாக பணியாற்றி வருகின்றனர்.
வெண்ணிற ஆடை அணிந்து நீல கரையுடைய பட்டி இடுப்பில் அணிந்து பெரிய சிலுவையுடன் கூடிய செபமாலை அணிந்து தலை குனிந்து மௌனத்தில் நிலைகொண்டு இறைபணியாற்றி வருகின்றனர். அச்சுவேலியில் பெரிய கன்னியர் மடம் ஒன்றை அருட் சகோதரி திரேசா கட்டி முடித்துள்ளார். அதில் பல இளம்பெண்கள் இணைந்து கல்வி கற்று வருகின்றனர்.இது போன்ற பெரிய மடம் நீர் கொழும்பிலும் உண்டு. தற்போது இச் சபையின் ஆசிய தலைவராக வண. பிதா Stephen விளங்குகின்றார்.
இன்று இறையாசீர் நிறையப் பெற்று செபமாலை தாசர் குருக்கள் மற்றும் துறவிகள் சபையானது வருடத்தின் 365 நாட்களும் ஒரு நாளில் 24 மணித்தியாலமும் தேவ நற்கருணை; முன்னிலையில் தொடர் செபமாலை செய்து வருகின்றனர். இவை உலக மக்களின் பாவங்களுக்கான பரிகாரமாகவும் மன்னிப்பிற்காகவும் ஒப்புக்கொடுக்கப்படுகின்றன.
01-12-2012 மன்னார செபமாலை தாசர் கன்னியர் சபை திராட்சைத் தோட்டத்தில் 3 இளம் கன்னியர்; மேதகு ஆயர் அவர்களால் திருநிலைப்படுத்தப்படடுள்ளனர். அருட் சகோதரி மேரி கீதா, அருட்சகோதரி மேரி கில்டா, அருட்சகோதரி ஐடா ஆகியோர் இச்சபையின் புதிய பக்களாவர். இவர்களை மனதார வாழ்த்தி இறையாசீருக்காய் செபிக்கின்றேன்.
தற்போது மன்னார் செபமாலை தாசர் கன்னியர் சபைத் தலைவி அருட்சகோதரி எலிசபேத் அவர்களையும் இறைபணிக்காவும் தொடர்ச்சியான மனிதாபிமான பணிக்காகவும் வாழ்த்திநிற்கின்றேன்.
Mr.Peter Sinclair | Project Consultant & Trainer | மன்னாரிலிருந்து
Tel No : 0094 77-2131-652
Email ; petsinclair@gmail.com