Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் வட கொரியாவில் முதல் கொரோனா மரணம் பதிவு

வட கொரியாவில் முதல் கொரோனா மரணம் பதிவு

1 minutes read

கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக வட கொரியா முதன்முதலாக அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவியுள்ளதாக வட கொரியா நேற்றைய தினமே முதன்முதலாக அறிவித்திருந்ததுடன், இன்று முதல் மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் 1,87,000 பேர் காய்ச்சலுடன் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வட கொரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினமே முதன்முதலாக அறிவிக்கப்பட்ட போதிலும், இதற்கு முன்னரே நாட்டில் வைரஸ் பரவியிருக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவின் தலைநகர் பியோங்யோங்கில் பெருமளவானோர் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வருடம் AstraZeneca, Sinopharm தடுப்பூசிகளை வழங்குவதற்கு உலக நாடுகள் முன்வந்தாலும், வட கொரியா அதனை நிராகரித்திருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More