இந்தியாவுடன் எல்லை பிரச்சினைகள் உள்ள போதும் இந்தியாவுடன் சீனா போரை விரும்பவில்லை என்று டெல்லியில் உள்ள சீனாவின் மூத்த தூதரக அதிகாரி மா ஜியா தெரிவித்துள்ளார்.
இருதரப்பினரும் எல்லைப் பகுதிகளில் மோதலை விரும்பவில்லை என்றும் மா ஜியா தெரிவித்துள்ளார்.
இந்திய பத்திரிகையாளர்களிடையே கருத்துரைத்த அவர், இருதரப்பினரின் நிர்வாக ரீதியான மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு ஆகியவை எல்லையில் மாற்றத்தை ஊக்குவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை நிலைமையை கடுமையானது என்று கூறியதற்கு பதிலளித்த சீனாவின் மூத்த தூதரக அதிகாரி மா ஜியா, இரு தரப்பினரும் அரசு மற்றும் இராணுவ வழிகளில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இதுவே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.