Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ChatGPTஆல் ஏற்படக்கூடிய ஆபத்துகளை ஆராயுமாறு வலியுறுத்தல்

ChatGPTஆல் ஏற்படக்கூடிய ஆபத்துகளை ஆராயுமாறு வலியுறுத்தல்

1 minutes read

ChatGPT செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை ஆராயுமாறு, ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமைக் கண்காணிப்பு அமைப்பிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு ஆய்வு நிறுவனம் உருவாக்கிய ChatGPT தொழில்நுட்பம் எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகரித்துவருவதாக ஸ்பெயின் தரவுகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், தனியுரிமை விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் ChatGPT மீதான புகார்களைப் பிரான்ஸின் தனியுரிமைக் கண்காணிப்பு அமைப்பும் விசாரித்து வருகின்றது.

அதேவேளை, ChatGPTயைத் தடை செய்த முதல் மேற்கத்திய நாடான இத்தாலியும் ChatGPT மீதான புகார்களை விசாரணைகளைத் தொடக்கியுள்ளது. தவறான தகவல்கள் பரவக்கூடிய சாத்தியங்களைக் கருத்தில்கொண்டு, இம்மாதம் ஆரம்பத்தில் ChatGPT மீது இத்தாலி தடை விதித்தது.

மேலும், ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட மேலும் 6 நாடுகளிலும் ChatGPT சேவை பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி : பல்கலைக்கழகங்களில் ChatGPT பயன்படுத்த தடை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More