Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து 5 பெண் குழந்தைகளின் தாய் பலி

ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து 5 பெண் குழந்தைகளின் தாய் பலி

1 minutes read

தமிழ்நாடு, மதுரையில் ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து 5 பெண் குழந்தைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்துக்கு, குறித்த பெண் வேலைத்தளத்தில் அவமானப்படுத்தப்பட்டமையே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டம், மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நாகலட்சுமி என்பவரே, பஸ்ஸில் தன்னுடன் இருந்த இரண்டு குழந்தைகளை அருகில் பயணம் செய்த சக பயணிகளிடம் கொடுத்துவிட்டு, திடீரென பஸ்ஸில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

தான் வேலை செய்த தளத்தில் தனக்கு மூவர் இடையூறு விளைவித்ததாகவும் தன்னை அடிக்க கையை ஓங்கியதாகவும் நாகலட்சுமி எழுதிவைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பத்துடன் தொடர்புடைய குறித்த மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில், பொலிஸார் அவர்களைத் தேடி வருகின்றனர்.

ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து பெண் பலி

மூலம் : பிபிசி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More