தொடர்ந்து 12ஆவது முறையாகவும் வட்டி விகிதங்களை இங்கிலாந்து மத்திய வங்கி உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவியல் கொள்கைக் குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து வங்கி விகிதம் 4.25% இலிருந்து 4.5% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது 10%க்கு மேல் இருக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து மத்திய வங்கி டிசெம்பர் 2021 முதல் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகிறது.
இந்த முடிவு, கடன் வாங்குபவர்களுக்கு செலவுகளை அதிகரிக்கும். ஆனால், சேமிப்பாளர்களுக்கு பயனளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆண்டுக்கு 8 முறை கூடி, வட்டி விகிதக் கொள்கையைத் தீர்மானிக்கிறது.
பணவீக்கத்தை 2% ஆக வைத்திருக்க வேண்டும் என்ற இலக்கு இருப்பதால், வட்டி விகிதங்களை உயர்த்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது விலைகள் பல மடங்குக்கு மேல் உயர்ந்து வருகின்றன.
இதனால் இங்கிலாந்து பொதுமக்கள் திகைத்துள்ளனர்.
மூலம் : பிபிசி