உலக பொருளாதார நெருக்கடியால் நாளுக்கு நாள் தமது நாட்டை விட்டு புலம் பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில்
138 புலம்பெயர்ந்தோரை ஸ்பெயின் கடலோர காவல்படையினர் கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த மீட்டனர்.
மூன்று ரப்பர் படகுகளில் ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள், சிறார்கள் உட்பட 138 பேர் இரவு நேரத்தில் நடுக்கடலில் சிக்கித் தவித்தனர்.
இதையறிந்த ஸ்பெயின் கடலோர காவல்படையினர், வேறொரு படகில் சென்று அனைவரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.