வட கொரியா ஜனாதிபதி கிம், அந்நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்து இரகசிய உத்தரவிட்டுள்ளார் என தென் கொரியா தகவல் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தென் கொரியாவின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளதாவது, “வடகொரியாவில் நாளுக்கு நாள் மக்களிடம் கஷ்டம் அதிகரித்து வருகின்றது. மோசமான பொருளாதார சூழல் காரணமாக வட கொரியாவில் தற்கொலைகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. வட கொரியாவின் கோங்ஜின் பகுதியில் மட்டும் கடந்த ஆண்டில் 35 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
“இதற்கிடையில், கடந்த ஆண்டு வட கொரியாவில் பட்டினிச் சாவுகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைகளில் வட கொரியா இறங்கியுள்ளது. தற்கொலையை சோசலிசத்திற்கு எதிரான தேசத் துரோகம் என்று தெரிவிக்கும் கிம், அதனைத் தடுக்க இரகசிய உத்தரவையும் பிறப்பித்திருக்கிறார். மேலும், தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்” என தெரிவித்துள்ளது.
முன்னதாக, வட கொரியா மனிதாபிமானமற்ற முறையில் குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் தூக்கிலிடுகின்றது என்றும் தென்கொரியா குற்றச்சாட்டியிருந்த நிலையில், இந்தத் தகவலையும் தென் கொரியா தற்போது வெளியிட்டுள்ளது.