Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இங்கிலாந்து குடியுரிமை பெறும் பாகிஸ்தான் வீரர்!

இங்கிலாந்து குடியுரிமை பெறும் பாகிஸ்தான் வீரர்!

1 minutes read

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர், தற்போது இங்கிலாந்தில் குடியுரிமை பெறவுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக இளம் வயதிலேயே விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் அபார தாக்கத்தை ஏற்படுத்தியவர் முகமது அமீர். ஆனால், 2010ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் செய்து, ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முகமது அமீர்க்கு தடை விதிக்கப்பட்டது.

மீண்டும் 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக முகமது அமீர் விளையாடினார். அதன் பிறகு, 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதன் பிறகு இங்கிலாந்தில் தங்கிய முகமது அமீர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். நடப்பாண்டு இறுதியில் அவர் இங்கிலாந்து குடிமகனாக மாறிவிடுவார். இதன்மூலம் அவருக்கு இங்கிலாந்து கடவுச்சீட்டு வழங்கப்படும்.

அதன்பிறகு முஹம்மது அமீர், இங்கிலாந்து அணிக்காக கூட விளையாட வாய்ப்பு ஏற்படலாம். மேலும், இங்கிலாந்து குடிமகனாக முகமது அமீர் மாறிவிட்டால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவும் எந்தத் தடையும் இல்லை.

இது குறித்து பேசிய முகமது அமீர், இங்கிலாந்து அணிக்காக விளையாடும் எண்ணம் எனக்கு இதுவரை இல்லை. ஆனால், ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன் எனக் கூறியுள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான அணியின் ஆல்ரவுண்டராக இருந்த அசார் முஹம்மத், இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற பிறகு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More