Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா 20 நிமிடங்களில் 2 லீட்டர் தண்ணீர் குடித்த பெண் மரணம்!

20 நிமிடங்களில் 2 லீட்டர் தண்ணீர் குடித்த பெண் மரணம்!

1 minutes read

அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 2 லீட்டர் தண்ணீரை குடித்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அதிக வெயிலில் இருந்து தப்பிக்க தண்ணீர் குடியுங்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு, அவர் 20 நிமிடங்களில் நான்கு பாட்டில் தண்ணீரை குடித்துள்ளார். அதாவது, 20 நிமிடங்களில் சுமார் 2 லீட்டர் தண்ணீர் குடித்துள்ளார்.

“இதையடுத்து, சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்குச் சுயநினைவு திரும்பவில்லை.

அதன் பின்னரே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு நிலைமை மோசமானது. பின்னர் அவர் உயிரிழந்தார்” என உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இது குறித்து டொக்டர் பிளேக் ப்ரோபெர்க் தெரிவித்துள்ளதாவது, “இது போன்ற சம்பவங்கள் கோடைக் காலத்தில் தான் அதிகம் ஏற்படும். ஏனென்றால், அப்போது தான் வெயில் காரணமாக திடீரென அதிகமான நீரை எடுத்துக் கொள்வார்கள்.

“உடலில் அதிக தண்ணீர் சத்து இருந்தும், போதுமான சோடியம் இல்லாமல் போனால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படலாம்” கூறினார்.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் அதிகளவிலான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் மக்களுக்கு குளிர்பானங்கள், வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள ஈரமான துண்டு ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More