Wednesday, May 1, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 6 ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்துக்கு அதிரடி தடை விதிப்பு

6 ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்துக்கு அதிரடி தடை விதிப்பு

0 minutes read

குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இருமல் மருந்துக்கு தென்னாபிரிக்கா உள்ளிட்ட 6 ஆபிரிக்க நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருமல் மருந்து விற்கப்பட்டு வந்தது.

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மருந்தை அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் சோதித்தன.

அதில் இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் அதை குடிக்கும் குழந்தைகளின் உடலில் நச்சுத்தன்மை உண்டாகி உடல்நலக்கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து தென்னாப்பிரிக்கா, கென்யா, தான்சானியா உள்ளிட்ட 6 ஆபிரிக்க நாடுகளில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் விற்ற அனைத்து மருந்து பாட்டில்களையும் திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More