செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் மாணவர் கடன் சர்ச்சை: இங்கிலாந்து அரசுக்கு எதிராக 9 பல்கலைக்கழகங்கள் வழக்கு!

மாணவர் கடன் சர்ச்சை: இங்கிலாந்து அரசுக்கு எதிராக 9 பல்கலைக்கழகங்கள் வழக்கு!

1 minutes read

இங்கிலாந்தில் வார இறுதிப் படிப்புகளை (weekend courses) பயிலும் சுமார் 22,000 மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பராமரிப்புக் கடன்கள் (maintenance loans) மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மானியங்களை (childcare grants) உடனடியாகத் திருப்பிச் செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிரடி முடிவை எதிர்த்து ஒன்பது பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்திற்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.

இந்த மாணவர்கள் பயிலும் வார இறுதிப் படிப்புகள் திடீரென “தொலைதூரக் கல்வி” (distance learning) என வகைப்படுத்தப்பட்டதே இந்தச் சிக்கலுக்கு முக்கியக் காரணமாகும்.

இதன்காரணமாக, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி தவறானது என்றும், அதனை அவர்கள் விரைவாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் பல மாணவர்கள் தங்கள் மூன்று ஆண்டு படிப்பை முடிக்க சில வாரங்களே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாத் ஸ்பா (Bath Spa), சவுதாம்டன் சோலண்ட் (Southampton Solent) மற்றும் இலண்டன் மெட்ரோபாலிட்டன் (London Metropolitan) ஆகிய பல்கலைக்கழகங்கள் இந்த சட்டப் போராட்டத்தில் முன்னணியில் உள்ளன.

இந்த திடீர் முடிவு, கல்வியின் மூலம் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த முயலும் பின்தங்கிய மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேரில் அமர்ந்து படிக்கும் ஒரு படிப்பைத் தொலைதூரக் கல்வி என வகைப்படுத்துவது “பொது அறிவுக்கு எதிரானது” என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

பல்கலைக்கழகங்கள் விதிகளைச் சரியாகப் பின்பற்றவில்லை அல்லது இந்த அமைப்பில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று அரசு தரப்பு கூறுகிறது.

கடன் வழங்கும் நிறுவனமான ‘ஸ்டூடண்ட் லோன்ஸ் கம்பெனி’ (Student Loans Company), இந்தப் படிப்புகளைச் சரியாக வகைப்படுத்துவது பல்கலைக்கழகங்களின் பொறுப்பு என்றும், 2011 முதல் நடைமுறையில் உள்ள விதிகளின்படியே தாங்கள் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மாணவர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாத வகையில் மலிவான திருப்பிச் செலுத்தும் திட்டங்களை உருவாக்கப் போவதாக அது கூறியுள்ளது.

இந்த உடனடி கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்துமாறு தேசிய மாணவர் சங்கம் (NUS) வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 13,000 பேர் கையெழுத்திட்ட மனு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், மாணவர்கள் வெஸ்ட்மின்ஸ்டரில் (Westminster) திரண்டு போராட்டத்திலும் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான நிதி உதவிகளைப் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.