பங்களாதேஷில் 3772 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 120 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பங்களாதேஷில் சுமார் 251 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 200 பேர் தலைநகர் டாக்காவில் பணிபுரிந்தவர்களாவர்.
கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை அளித்த வைத்தியர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பங்களாதேஷ் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நோயாளிகளிடமிருந்து வைத்தியர்களுக்கு நோய்த்தொற்று பரவாமலிருப்பதற்கான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களில் நிலவிய குறைபாடே இதற்கான காரணமெனவும் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.