சீனாவில் அதிபர் ஷி ஜின்பிங்கை மாற்றி விட்டு, ஜனநாயக முறைப்படி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வலியுறுத்தி மனித உரிமை அமைப்புகள் டோக்கியோவில் ஆர்ப்பாட்டம் நடத்தின.
உலகம் கொரோனவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அதை பரவுவதற்கு காரணமாக இருந்த சீனா, இந்தியாவுடனான எல்லையில் தகராறு செய்வதுடன், ஜப்பானின் செங்காகு (Senkaku) தீவுக்கும் உரிமை கொண்டாடுகிறது.
ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் சீனாவின் முயற்சிகளும் சேர்ந்து சீனாவை சர்வதேச சர்ச்சை மையமாக மாற்றி உள்ளது. இந்த நிலையில், ஏகாதிபத்திய ஆட்சி நடத்தும் அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு எதிராக, ஜப்பான், இந்தியா, தைவான் மற்றும் திபெத்தை சார்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், டோக்கியோவில் ஷிபுய்யா என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.