Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால்4 ஆயிரத்து 2 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால்4 ஆயிரத்து 2 பேர் உயிரிழப்பு!

1 minutes read

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 4 ஆயிரத்து 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 84 ஆயிரத்து 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஒரு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை, 70 நாட்களில் இல்லாத அளவுக்கு 85 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

மேலும் புதிதாக 84 ஆயிரத்து 332 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் புதிதாக 4 ஆயிரத்து 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 21 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11 இலட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More