Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பூதாகரமாகும் பெகாசஸ் உளவு விவகாரம்!

பூதாகரமாகும் பெகாசஸ் உளவு விவகாரம்!

1 minutes read

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பெகாசஸ் உளவு விவகாரத்தில், நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் எதிர்கட்சிகள் தடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், எதிர்கட்சிகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கவில்லை. தங்கள் கடமையைத்தான் செய்கின்றன.

பெகாசஸ் உளவு விவகாரம், எங்களை பொறுத்தவரை தேசியம், தேசதுரோகம், சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். இது தனியுரிமை தொடர்புடையது.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. பெகாசஸ் மென்பொருளை வாங்கினீர்களா? இந்தியர்களை உளவு பார்த்தீர்களா? என்றுதான் கேட்கிறோம்.

இந்த பிரச்சினையில் இந்திய ஜனநாயகத்தின் ஆன்மா மீது பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆகவே பெகாசஸ் உளவு பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் முன்னணியில் விவாதம் நடத்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More