Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் புதிதாக 35 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் புதிதாக 35 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா!

1 minutes read

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 34 இலட்சத்து 17 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆயிரத்து 798 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 26 இலட்சத்து 32 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் புதிதாக 281 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 44 ஆயிரத்து 529 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 3 இலட்சத்து 40 ஆயிரத்து 639 பேர், இந்தியாவில் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More