சுழிபுரம் சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பில், நேற்று (29) இரவு இருவர், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுழிப்புரம் பகுதியைச் சேர்ந்த டேவிட் (வயது 18) மற்றும் சின்னராசா சிவதர்ஷன் (வயது 17) ஆகியோரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள், இன்று (30) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், ஏற்கெனவே, அறுவர்கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய ஐவரும் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டனர்.
