0
பொன்நகர் வேதா குடியிருப்பு, 50வீட்டுத்திட்டம் ,25வீட்டுத்திட்டம்,17வீட்டுத்திட்டம் ஆகிய பகுதிகளுக்கு வருடம் முழுவது குடிநீர் இல்லாத பிரச்சனை இருப்பதை ஆராய்ந்த கரைச்சி பிரதேச சபை இன்றில் (16.01.2020) இருந்து வருடம் முழுவதும் குடிநீர் வழங்குவதற்கான பூர்வாங்கப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளது.
குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிதன்,பிரதேச சபை உறுப்பினர்களான ஜீவராஜா,சிவகுமாரன் ஆகியோரே குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
அது மட்டுமல்லாது பாரதிபுரம் தெற்கு பகுதிக்கு மக்கள் இரவு நேரத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தடுக்கும் நோக்கில் முதற்கட்டமாக பத்து வீதி விளக்குகள் பொருத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் பாரதிபுரத்தையும் பொன்னைகரையும் இணைக்கும் செபஸ்டியார் கோவில் வீதி புனரமைப்பு பணியும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.