Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும்

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும்

1 minutes read

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினமும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபானசாலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் விற்பனை நிலைய அனுமதி பத்திரமும் இரத்து செய்யப்படும் என்றும் அத்திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்தோடு, இவ்விடயம் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 1913 எனும் இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியும் எனவும் மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பாதுகாப்பினை பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வன்முறை சம்பவங்கள் தோற்றம் பெறுவதை தவிர்ப்பதற்கு இரண்டு நாட்கள் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மதுவரி திணைக்களத்துக்கு எழுத்து மூலமாக அறிவித்ததை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More