Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி கப்பம் பெற்ற இருவரில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி கப்பம் பெற்ற இருவரில் ஒருவர் கைது!

1 minutes read

கடந்த 31ஆம் திகதி பொலிஸ் என தம்மை அடையாளப்படுத்திய சந்தேகநபர் இருவர், பழக்கடை வியாபாரி ஒருவரை ஏமாற்றி 7 ஆயிரத்து 500 ரூபாய்கும் அதிகமான பணத்தை கப்பமாகப் பெற்றுச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் பழக்கடை வியாபாரி முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் வியாபாரியின் முறைப்பாட்டுக்கமைய யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது சம்பவம் இடம்பெற்ற இடத்திலுள்ள கடை ஒன்றின் சிசிரிவி கமராவின் பதிவைப் பெற்ற பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபர்களை இனங்கண்டு பழக்கடை வியாபாரிகளிடம் ஒளிப்படங்களை வழங்கி, எங்கு கண்டாலும் தகவல் வழங்குமாறு தெரிவித்திருந்தனர்.

அந்தவகையில் நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் இருவரில் ஒருவர் பேருந்து நிலையத்துக்குள் வந்துள்ளார். அவர் தொடர்பாக அங்கிருந்தவர்கள் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவலை வழங்கியிருந்தார்கள்.

குறித்த தகவலுக்கமைய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வருவதற்கு முன்னர் சந்தேகநபர் தப்பிக்க முயன்றபோது அங்கிருந்த இளைஞர்களால் மடக்கிபிடிக்கப்பட்டார்.

அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸ் புலனாய்வு பிரிவிவு சந்தேகநபரை பொறுப்பேற்று, யாழ்.குற்றதடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் கீரிமலை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் மற்றைய சந்தேகநபரைக் கைது செய்யும் நடவடிக்கையைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More