செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரம்புக்கனையில் மண்சரிவு – நால்வர் காணாமல் போயுள்ளதாக தகவல்!

ரம்புக்கனையில் மண்சரிவு – நால்வர் காணாமல் போயுள்ளதாக தகவல்!

0 minutes read

கேகாலை – ரம்புக்கனை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் பலர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஆரம்பகட்ட தகவல்களுக்கு அமைய 4 பேர் காணாமல் போயுள்ளதாக குறித்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

எனினும், வீட்டில் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்தே, இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More