0
சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக எரிவாயுவை விற்பனை செய்வதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை, எரிவாயுவின் நிர்ணய விலையை பொதுமக்கள் அறியும் படி அதன் சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
அதிக விலைக்கு எரிவாயு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.