Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உன்னிச்சை குளத்தில் நீரிழ் மூழ்கி இருவர் மரணம்

உன்னிச்சை குளத்தில் நீரிழ் மூழ்கி இருவர் மரணம்

1 minutes read

9 பேர் கொண்ட நண்பர்களுடன் மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தில் நீராடச் சென்ற 17 வயது மற்றும் 35 வயதுடைய இருவர் நேற்று மாலை நீரிழ் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுணதீவு காயமடு பிரதேசத்தைச் 35 வயதுடைய மனோகரன் கண்ணதாசன் சடலமாக மீட்கப்பட்டுள்ள அதேவேளை 17 வயதுடைய விஷ்ணுகாந் விதுஷனன் காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

17 வயது சிறுவன் குளத்தில் மூழ்கியதையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக குளத்தில் குதித்த 35 வயதுடைய நபர் நீரிழ் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் மற்றும் இராணுவத்தினர் இனைந்து காணாமல் போனவரை தேடியபோது அவரை கண்டுபிடிக்காத நிலையில் கடற்படையின் உதவியை கோரியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More