December 2, 2023 9:31 pm

குடும்பஸ்தர் ஒருவர் இராணுவச் சிப்பாயால் சுட்டுக்கொலை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

குடும்பஸ்தர் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாயால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜபக்சபுர பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ராஜபக்சபுர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக துப்பாக்கியால் சுட்டு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்